Sunday, November 13, 2005

நீ பிழையற்றவன் இல்லை!

நீ
பிழையற்றவன் இல்லை
உன் படைப்பில் கண்டேன்!
தத்துவத்தில்
வலிகள் ஆறுவதில்லை
இறையே!-எனக்குன்
வேதாந்தம் தேவையில்லை

தூய்மையில் நஞ்சினை
கலக்கவிட்டது யார்?
நஞ்சினை படைத்தது யார்?

வறுமைக்கு காரணமானவர்க்கே
உழைத்து
வயிறு வளர்க்கும்
அவலம்
இந்நிலைக்கு காரணமான
உன்னை தொழுதுதான்
இந்நிலை விட்டு
ஓடவேண்டுமா மனிதம்?
இரண்டுக்கும் பேதமில்லையே
இறைவா!
உன்னை நான் எதிர்ப்பதில்
பிழையில்லையே!

எதற்கும் காரணமுண்டாம்
அதை நான் என்னென்பது
காரணத்தோடு பிழைசெய்யலாமோ?
அது நீயே ஆனாலும்
இறைவா!
வலி சுமப்பது
நாங்கள்!

உன் நீதிமன்றத்தில்
குற்றஞ்சாட்டப்பட்ட எதுயெதற்கோ
மனிதஜென்மமோ!
இல்லையிது
உன்
மிகப் பெருஞ்சிந்தனையின்
குறை பிரசவமோ!
அதற்கும் ஓர் காரணம்
சொல்லப்போகிறாயோ?
காரணத்தோடு பிழைசெய்யலாமோ
இறைவா!
வலி சுமப்பது
நாங்கள்!

தத்துவத்தில்
வலிகள் ஆறுவதில்லை
உன்
வேதாந்தம் ஏதும் தேவயில்லை.

0 Comments:

Post a Comment

<< Home