விதைக்குள் சிறையென்ன...
கனவின்றி வாழ்க்கையில்லை
கனவிற்குள் வாழ்க்கையில்லை
கனவொன்றே வாழ்க்கையில்லை
உன்னை உணர்ந்து
மனதை அகழ்ந்து
உழுது
கனவை விதைத்து
வியர்வை தெளித்து
பாரு
உனதான வாழ்க்கைக்கு நீ
உன்
சுவடாலே பாதையிடு
ஏங்கினால்...
தீருமா...
ஏங்கினால் நீகொண்ட
தாகம் தீர்ந்திடுமா
ஏக்கத்தில் தீர்ந்திடுமா
உன் ஆயுள்...
விதைக்குள் சிறையென்ன
மண்ணை
நீவெல்ல வா!
வாழ்க்கை!
இந்த பிறவிவாழ்வதற்கேநிச்சயம்யாரும் வாழலாம்எப்படியும்!நீவாழ வேண்டுமென்றால்வாழ்ந்தேயாக வேண்டுமென்றால்ஏன் வாழவேண்டும்?என்றுஇதயத்தின் மூலையில்சலிப்பின்விரக்தியின்அவநம்பிக்கையின்முனகலாய்ஒரு கேள்விகேட்டுவிட்டால் போதும்மரணம்பக்கம் வந்துபல்லிளிக்கும் - பின்வாழ்வின் பாதையில்உன் காலடி பதியும்திசையெலாம் தோன்றிதன்பள்ளத்தாக்கின் அழகைவர்ணிக்கும்சிகரத்தின் விளிம்பினும்பள்ளத்தின் ஆழம்மனதை மயக்கும்உன்னை இழுக்கும்ஏறுவது கடினம்விழுவது சுலபம்வேறெதில் உன்கவனம் இருக்கும்?
நான் உணர்வு!
இன்று
நான் என
உணரும் அது (எது?)
உடலின் அழிவிற்கு பின்
யாரென அல்லது
எதுவென
உணரும் தன்னை?
எழுதப்படாத கவிதை!
பட்டாம்பூச்சியாய்
பரிணமிக்கத் தெரியாமல்
மனதுள் நெளிகிறது
இதயச்சுவரை குடைகிறது
புழுவாய்
ஒரு
உணர்வு!
தேடாதே, தொலைந்துபோவாய்!
தேடாதே,
தொலைந்துபோவாய்!
வாழ்க்கையின் அர்த்தத்தை
ப்ரபஞ்சத்தின் இரகசியத்தை
படைப்பின் மூலத்தை
இறைமை தத்துவத்தை
தேடாதே,
தொலைந்துபோவாய்!
எது உண்மை?
எது பொய்?
தேடாதே,
தொலைந்துபோவாய்!
வாழ்க்கை யெனும்
சிறு புள்ளியில் நின்றுகொண்டு
ஆகாயத்தின் அகலம்
ஆய்பவனே!
தேடாதே,
தொலைந்துபோவாய்!
தேடிச்சென்றவர்
வென்றதில்லை
விடைகண்டதாய்ச் சொன்னவர்
யாருமில்லை!
விடைபோல் விடைகள்
பலவுண்டு தத்துவமென்று,
பயனென்ன?
விடைகளின் முடிவில்
நிற்பதென்னவோ
கேள்விக் குறிகள்!
ஒன்று
கேள்வியின் சுழலில்
சிதைந்து போகிறார்
இல்லை
விடையின் ப்ரவாகத்தில்
கரைந்து போகிறார்
ஆதலினால்
தேடாதே,
தொலைந்துபோவாய்!
எல்லாம் ஒன்றென்பார்
மனதில் பல காண்பார்
பலப் பல இருந்தாலும்
ஒன்றில் அடங்கிடும்
நிலையும் காண்பார்
இதுதான்
உண்மை யென்பார்
அதுதான்
உண்மையென்று
யார் கண்டார்?
அறிவின் மூலைக்குள்
பதுங்கிக்கொண்டு
தத்துவ வலை
பின்னுவார் - பின்
தன் வலையில்
தானே சிக்கி
மீளத்தெரியாது புலம்புவார்
துவளுவார்!
நித்ய உண்மையென்று
ஏதுமற்ற இப்பெருவெளியில்
ஆணவ அறிவுகொண்டு
தேடாதே,
தொலைந்துபோவாய்!
நீயாகிய நீ!
நீயான வெளியில்நீயான மண்ணில்நீயான செடி பூத்தநீயான மலர் பறித்துநீயெனப்படுஞ் சிலைக்குநீயாகிய மனிதன்பூஜித்துத் தொழுகிறான்தன்னை!(வேறு)நீஉன்னில்உன்னால்உனைக் கொண்டுஉனக்கேசெய்வதேன் பூஜை!தொழுது கொள்வதேன்உன்னை!வேடிக்கைதான்நீயேயாகிய நீ!
என்னுள் நீ!
சில காலம்உன்னை சிந்தித்ததே இல்லைசிந்தித்தபோதுஏற்பதா மறுப்பதாதெரியவில்லை
தெரிந்தபோதுஏற்கவில்லைமறுக்கவுமில்லை
காலம் மாறநான் மாறஎன்னுள் நீயும்
நேசித்தேன்நிந்தித்தேன்பித்தனாய் உன்நினைவில் அலைந்தேன்வாழ்வின் துன்பங்கள்தந்த இரணத்தில்உன்னைஏசி உமிழ்ந்தேன்நீஇருந்தாலும்இல்லாமல் போனாலும்இனி கவலையில்லைஎன்றேதூர எரிந்தேன்ஆறுதல் இல்லாபோதுகளில்அமைதியற்று திரிகையில்தேடி களைத்துசோர்ந்து விழும் போதெல்லாம்வேறெங்கேஉன் மடிதேடி விழைந்தேன்குழந்தையாய் குழைந்தேன்உனக்கு மட்டுமேபுரியும்படிநீ மட்டுமேஅறியும்படிஉடல் கரையஉள்ளம் கரையநான் தொலையஅழுதேன்
போடா! பரமா!உன்னை எனக்குநேசிக்கவும் தெரியவில்லைவெறுக்கவும் தெரியவில்லைநீ படைத்த பிழைகளைஏற்கும் பக்குவம்எனக்கில்லைஉன்னை தவிர்த்துவாழவும்வலிமை எனக்குபோதவில்லை
உனக்கென்னநான்நல்ல வேடிக்கைதான்வேறு கதியில்லை என்றுஉள்ளம் குமுறஉன்முன் வந்துவிழுவது - உனக்குநல்ல கேளிக்கைதான்!
பிஞ்சு மலர்கள்
கிழிந்து விரிகின்றன
பிஞ்சு மலர்கள்
மலரென்ற ஜென்மம்
பாவமாக
மலர்கின்ற அனுபவம்
சோகமாக
எச்சில் கன்னத்தில்
தூய கண்ணீர்
நிலைகண்டு நொந்ததோ
வலிகண்டு நொந்ததோ
இரணங் கண்டு
வடிந்தென்ன - அதையும்
காமங் கொண்டுதானே
நக்கும்
மலம் மேயும் பன்றிகள்...