யார் பிழை?
இயற்கையின் மொத்தத்திலும்
கண்டேன்
தூய்மை நிலை
மனிதனுக்கு மட்டுமிங்கே
என்ன குறை
அது வாக
படைத்ததெல்லாம்
அதுவாகி நிற்பதன்றி
வேறு கடமையில்லை
ஆதலினால்
அவையுள் ஏதும்
களங்கமில்லை
எது ஆக
இப்படைப்பென்றே
அறியாத மானுடம்
குறைகளின் வடிவமானது
யார் பிழை?
இலக்கினை
எங்கோ வைத்து
பாதையில் தேடவிட்டாய்
வழியெல்லாம் சகதி
மனிதரும்
தூய்மை கெட்டார்
நீ
வடித்த சிலைகளுள்
மனித சிலையுள் மட்டும்
பிழையா?
போடா போ!
உன்
உளி செய்த தவறுக்கு
சிலை மீது உமிழவோ?
கண்டேன்
தூய்மை நிலை
மனிதனுக்கு மட்டுமிங்கே
என்ன குறை
அது வாக
படைத்ததெல்லாம்
அதுவாகி நிற்பதன்றி
வேறு கடமையில்லை
ஆதலினால்
அவையுள் ஏதும்
களங்கமில்லை
எது ஆக
இப்படைப்பென்றே
அறியாத மானுடம்
குறைகளின் வடிவமானது
யார் பிழை?
இலக்கினை
எங்கோ வைத்து
பாதையில் தேடவிட்டாய்
வழியெல்லாம் சகதி
மனிதரும்
தூய்மை கெட்டார்
நீ
வடித்த சிலைகளுள்
மனித சிலையுள் மட்டும்
பிழையா?
போடா போ!
உன்
உளி செய்த தவறுக்கு
சிலை மீது உமிழவோ?
3 Comments:
நன்றி ஆர்த்தி
"எய்தவனை விடுத்து அம்பை நோவதேன்" என்று சொல்வார்கள்.
:)
அழகான சிந்தனை
நன்றி கீதா
Post a Comment
<< Home