Monday, January 23, 2006

எதையும் நேசிப்பதே வாழ்க்கை!

உன்னை
நேசிப்பவர் மட்டுமல்ல
வஞ்சிப்பவரோடும் சேர்த்துதான்
வாழ்க்கை!

நேசிப்பவரால் மட்டுமல்ல
வாழ்க்கை
வஞ்சிப்பவராலும்
அர்த்தப்படுகிறது...

நேசிப்பவரிலும் தவறிருக்கும்
வஞ்சிப்பவரிலும் நிறையிருக்கும்
இருவருக்குள்ளும்
உண்மை, பொய்
இரண்டுமிருக்கும்

நேசித்தவரே வஞ்சிப்பது
வாழ்வின் இரணங்களில்
உச்சம்!
வஞ்சித்தவரே
நம்மை நேசிப்பது
வாழ்வை அர்த்தப்படுத்தும்
இன்பம்!

நட்புடன்வஞ்சம்
கலந்திடில்
பகிர்ந்த நட்புக்காக
வஞ்சகம்
மன்னிக்கப்படட்டும்!
பகையோடு வஞ்சம்
உண்டாகிடில்
புரித லின்மைக்காக - அங்கு
வஞ்சகம்
இரங்கப்படட்டும்!

புரிந்து கொள்ளலின்
வெற்றியாய்
நேசமும் நட்பும்
அதன் தோல்வியாய்
பகையும் வஞ்சமும்
முனைந்தால்
தோல்வி வெற்றியாகும்
முன்வந்து பகையும்
நேசம் பேசும்

வஞ்சம் கொண்டோரையும்
நேசம் கொண்டழை
எதையும் நேசிப்பதே
வாழ்க்கை!

5 Comments:

Blogger Unknown said...

நண்பரே இதைத் தான் உங்ககிட்டே எதிர்ப்பார்த்தேன்... தொடருங்க சார்...

Mon Jan 23, 04:50:00 AM PST  
Blogger sathesh said...

நன்றி தேவ்...

Mon Jan 23, 07:32:00 AM PST  
Blogger sathesh said...

நன்றி ஆர்த்தி

Mon Jan 23, 07:33:00 AM PST  
Blogger சிந்து said...

உங்கள் ஆக்கங்கள் படித்தேன் சுவைத்தேன் நன்று
அன்புடன் சிந்து...

Tue Jan 24, 02:27:00 AM PST  
Blogger sathesh said...

தங்கள் வருகைக்கு நன்றி சிந்து

Tue Jan 24, 06:09:00 AM PST  

Post a Comment

<< Home