Saturday, January 14, 2006

சருகுகள்!

வீழ்தலில்
சுகம் கண்டு விட்டாய்
இலையே! - இனி
நிலம் நிறைக்கும்
சருகுகள்!
ஏன் வீழ்ந்தாய்?
வீழ்கையில் விழும்
மறித்த செவியில்
கேள்விகள்!

உனக்கா தெரியாது - இனி
பதில் சொல்ல!
ஆயிரம் உண்டே காரணங்கள்
பதிலென்றாக!

காலத்தின் கோலம்
காற்றின் வேகம்
கோடரியின் தாக்கம்
வேரோடு மண்கொண்ட பேதம்
மரமேறும் பாதம்
காதல் பறவைகளின் சில்மிஷம்
இன்னும் இன்னும்

உனக்கா தெரியாது
பதில் சொல்ல! - இலையே
வீழ்தலில்
சுகம் கண்டு விட்டாய்
இனிநிலம் நிறைக்கும்
சருகுகள்!

1 Comments:

Blogger கீதா said...

ஒரு காரணம் விட்டுவிட்டேகளே

மண்ணுக்குள் உரமாகி
வேர்களின் உட்புகுந்து
சத்தாகி கிளைவந்து
மீண்டும் துளிர்த்திடவே

அன்புடன்
கீதா

Mon Jan 23, 09:26:00 AM PST  

Post a Comment

<< Home