நீயாகிய நீ!
நீயான வெளியில்நீயான மண்ணில்நீயான செடி பூத்தநீயான மலர் பறித்துநீயெனப்படுஞ் சிலைக்குநீயாகிய மனிதன்பூஜித்துத் தொழுகிறான்தன்னை!(வேறு)நீஉன்னில்உன்னால்உனைக் கொண்டுஉனக்கேசெய்வதேன் பூஜை!தொழுது கொள்வதேன்உன்னை!வேடிக்கைதான்நீயேயாகிய நீ!
என்னுள் நீ!
சில காலம்உன்னை சிந்தித்ததே இல்லைசிந்தித்தபோதுஏற்பதா மறுப்பதாதெரியவில்லை
தெரிந்தபோதுஏற்கவில்லைமறுக்கவுமில்லை
காலம் மாறநான் மாறஎன்னுள் நீயும்
நேசித்தேன்நிந்தித்தேன்பித்தனாய் உன்நினைவில் அலைந்தேன்வாழ்வின் துன்பங்கள்தந்த இரணத்தில்உன்னைஏசி உமிழ்ந்தேன்நீஇருந்தாலும்இல்லாமல் போனாலும்இனி கவலையில்லைஎன்றேதூர எரிந்தேன்ஆறுதல் இல்லாபோதுகளில்அமைதியற்று திரிகையில்தேடி களைத்துசோர்ந்து விழும் போதெல்லாம்வேறெங்கேஉன் மடிதேடி விழைந்தேன்குழந்தையாய் குழைந்தேன்உனக்கு மட்டுமேபுரியும்படிநீ மட்டுமேஅறியும்படிஉடல் கரையஉள்ளம் கரையநான் தொலையஅழுதேன்
போடா! பரமா!உன்னை எனக்குநேசிக்கவும் தெரியவில்லைவெறுக்கவும் தெரியவில்லைநீ படைத்த பிழைகளைஏற்கும் பக்குவம்எனக்கில்லைஉன்னை தவிர்த்துவாழவும்வலிமை எனக்குபோதவில்லை
உனக்கென்னநான்நல்ல வேடிக்கைதான்வேறு கதியில்லை என்றுஉள்ளம் குமுறஉன்முன் வந்துவிழுவது - உனக்குநல்ல கேளிக்கைதான்!
பிஞ்சு மலர்கள்
கிழிந்து விரிகின்றன
பிஞ்சு மலர்கள்
மலரென்ற ஜென்மம்
பாவமாக
மலர்கின்ற அனுபவம்
சோகமாக
எச்சில் கன்னத்தில்
தூய கண்ணீர்
நிலைகண்டு நொந்ததோ
வலிகண்டு நொந்ததோ
இரணங் கண்டு
வடிந்தென்ன - அதையும்
காமங் கொண்டுதானே
நக்கும்
மலம் மேயும் பன்றிகள்...