உறவு!
நேற்று
புன்னகையில் அலர்ந்த
முகங்கள் - இன்று
வெறுப்பில் சுருங்குவதேன்!!
என்னை வரவேற்கஅவர் பாதையில்
தோரணங் கட்டியவர்கள்
வாசலின்
நிழலில் மறைந்துகொண்டு
தமை இல்லையென்று
ஜாடை காட்டுவதேன்!!
மறைந்து கொள்வதாய்
எனை
விழிமூடச் சொன்னவர்கள்
தொலைந்தே போனதேன்!!
அகம் வந்த உறவை
வாசல்வரை சென்று
வழியனுப்பினேன்
விட்டால் போதுமென்று
தலை தெறிக்க
ஓடுவதேன்!!
ஜீவனாய் சுரந்தனர்
என்னுள்ளே
என்றுமென் பயணம்
அவர் நினைவுடனே..
வெறும்
எச்சிலாய் சுரந்தேனோ
அவருள்ளே
உமிழ்ந்தபடி பயணம்
தத்தம்
திசையினிலே...
யார் பிழை?
இயற்கையின் மொத்தத்திலும்கண்டேன்தூய்மை நிலைமனிதனுக்கு மட்டுமிங்கேஎன்ன குறைஅது வாகபடைத்ததெல்லாம்அதுவாகி நிற்பதன்றிவேறு கடமையில்லைஆதலினால்அவையுள் ஏதும்களங்கமில்லைஎது ஆகஇப்படைப்பென்றேஅறியாத மானுடம்குறைகளின் வடிவமானதுயார் பிழை?இலக்கினைஎங்கோ வைத்துபாதையில் தேடவிட்டாய்வழியெல்லாம் சகதிமனிதரும் தூய்மை கெட்டார்நீவடித்த சிலைகளுள்மனித சிலையுள் மட்டும்பிழையா?போடா போ!உன் உளி செய்த தவறுக்குசிலை மீது உமிழவோ?
எதையும் நேசிப்பதே வாழ்க்கை!
உன்னை
நேசிப்பவர் மட்டுமல்ல
வஞ்சிப்பவரோடும் சேர்த்துதான்
வாழ்க்கை!
நேசிப்பவரால் மட்டுமல்ல
வாழ்க்கை
வஞ்சிப்பவராலும்
அர்த்தப்படுகிறது...
நேசிப்பவரிலும் தவறிருக்கும்
வஞ்சிப்பவரிலும் நிறையிருக்கும்
இருவருக்குள்ளும்
உண்மை, பொய்
இரண்டுமிருக்கும்
நேசித்தவரே வஞ்சிப்பது
வாழ்வின் இரணங்களில்
உச்சம்!
வஞ்சித்தவரே
நம்மை நேசிப்பது
வாழ்வை அர்த்தப்படுத்தும்
இன்பம்!
நட்புடன்வஞ்சம்
கலந்திடில்
பகிர்ந்த நட்புக்காக
வஞ்சகம்
மன்னிக்கப்படட்டும்!
பகையோடு வஞ்சம்
உண்டாகிடில்
புரித லின்மைக்காக - அங்கு
வஞ்சகம்
இரங்கப்படட்டும்!
புரிந்து கொள்ளலின்
வெற்றியாய்
நேசமும் நட்பும்
அதன் தோல்வியாய்
பகையும் வஞ்சமும்
முனைந்தால்
தோல்வி வெற்றியாகும்
முன்வந்து பகையும்
நேசம் பேசும்
வஞ்சம் கொண்டோரையும்
நேசம் கொண்டழை
எதையும் நேசிப்பதே
வாழ்க்கை!
உதிரும் உறவு!
இருத்தலுக்குப் போராடி
போராட வலுவின்றி
சோர்ந்தது...
விடு
என்றபடி
இரணமின்றி கிடந்தது
கிளை...
விழுதல்
நன்மையே என்பதால்
மகிழ்ந்தே நின்றது
மரம்...
பாவம்
தேவையின் கைவிடலுக்கு
இலக்காகி
காற்றின் இழுப்புக்கு
இறையாகி
அரற்றியபடி...
நேற்று
உறவுக்குத் தளிராகி
இன்று
உறவுக்காகச் சருகாகி
உதிர்ந்தது
ஒரு சோக கவிதையாய்
உறவை தொலைத்த
இலை...
...காத்திருக்கிறேன்!
ஒருவிளக்கமற்ற தொடக்கத்தின்முடிவற்ற பயணத்தில்அர்த்தமற்ற இலக்கினைவாழ்க்கையென்று நம்பிகாத்திருக்கிறேன்நான் பயணம்போகஒரு தேர்வருமென்று.கடந்து போனதுபல தேர்கள்எதிலும்எனதான இடம் காணவில்லை "அடுத்தவர் போவது உனக்கெதற்கு உனதேயானது வரும் பாதை பார்த்திரு" நிஜங்கள் பொய்க்கும்போது பொய்கள்தானே சுகம்தரும் ஆறுதல்வருமெதையும் விமர்சித்தபடிஇவையெல்லாம் எனதிலையென்று ஆணவத்துடன் புலம்பியபடிஒரு
விளக்கமற்ற தொடக்கத்தின்
முடிவற்ற பயணத்தில்
அர்த்தமற்ற இலக்கினை
வாழ்க்கையென்று வகுத்து
...காத்திருக்கிறேன்!
நாளை!
இன்று முடிந்தால்நாளை வருமெனகாத்திருந்தேன்கனவு தேய்ந்துநான்மெல்ல விழிக்கையில்அழகுடன் பூத்திருந்ததுகாலை!நாளை வந்ததெனகுதித்தெழுந்தேன்வெளியேகண்சிமிட்டி நின்றதுஅதே இன்று!ஏதும் புரியாமல்நின்றேன்'இது இன்றா நாளையா?'போவோரைக் கேட்டேன்இன்றென்றார்இன்று முடிந்தால்வரும்நாளையென்றார்பல இன்றுகளாய் காத்திருக்கிறேன் - என்நாளையை எதிர்பார்த்து - ஆனால்இன்று முடிந்தும்மீண்டும்இன்றே வருவதேன்?
சருகுகள்!
வீழ்தலில்சுகம் கண்டு விட்டாய்இலையே! - இனிநிலம் நிறைக்கும்சருகுகள்!ஏன் வீழ்ந்தாய்?வீழ்கையில் விழும்மறித்த செவியில்கேள்விகள்!உனக்கா தெரியாது - இனிபதில் சொல்ல!ஆயிரம் உண்டே காரணங்கள்பதிலென்றாக!காலத்தின் கோலம்காற்றின் வேகம்கோடரியின் தாக்கம்வேரோடு மண்கொண்ட பேதம்மரமேறும் பாதம்காதல் பறவைகளின் சில்மிஷம்
இன்னும் இன்னும்உனக்கா தெரியாதுபதில் சொல்ல! - இலையேவீழ்தலில்சுகம் கண்டு விட்டாய்இனிநிலம் நிறைக்கும் சருகுகள்!