Saturday, April 29, 2006

நான் உணர்வு!

இன்று
நான் என
உணரும் அது (எது?)
உடலின் அழிவிற்கு பின்
யாரென அல்லது
எதுவென
உணரும் தன்னை?

எழுதப்படாத கவிதை!

பட்டாம்பூச்சியாய்
பரிணமிக்கத் தெரியாமல்
மனதுள் நெளிகிறது
இதயச்சுவரை குடைகிறது
புழுவாய்
ஒரு
உணர்வு!