Saturday, May 13, 2006

விதைக்குள் சிறையென்ன...

கனவின்றி வாழ்க்கையில்லை
கனவிற்குள் வாழ்க்கையில்லை
கனவொன்றே வாழ்க்கையில்லை

உன்னை உணர்ந்து
மனதை அகழ்ந்து
உழுது
கனவை விதைத்து
வியர்வை தெளித்து
பாரு

உனதான வாழ்க்கைக்கு நீ
உன்
சுவடாலே பாதையிடு

ஏங்கினால்...
தீருமா...
ஏங்கினால் நீகொண்ட
தாகம் தீர்ந்திடுமா
ஏக்கத்தில் தீர்ந்திடுமா
உன் ஆயுள்...

விதைக்குள் சிறையென்ன
மண்ணை
நீவெல்ல வா!

Saturday, May 06, 2006

வாழ்க்கை!

இந்த பிறவி
வாழ்வதற்கே
நிச்சயம்
யாரும் வாழலாம்
எப்படியும்!
நீ
வாழ வேண்டுமென்றால்
வாழ்ந்தேயாக வேண்டுமென்றால்

ஏன் வாழவேண்டும்?
என்று
இதயத்தின் மூலையில்
சலிப்பின்
விரக்தியின்
அவநம்பிக்கையின்
முனகலாய்
ஒரு கேள்வி
கேட்டுவிட்டால் போதும்
மரணம்
பக்கம் வந்து
பல்லிளிக்கும் - பின்
வாழ்வின் பாதையில்
உன்
காலடி பதியும்
திசையெலாம் தோன்றி
தன்
பள்ளத்தாக்கின் அழகை
வர்ணிக்கும்

சிகரத்தின் விளிம்பினும்
பள்ளத்தின் ஆழம்
மனதை மயக்கும்
உன்னை இழுக்கும்

ஏறுவது கடினம்
விழுவது சுலபம்
வேறெதில் உன்
கவனம் இருக்கும்?