Friday, January 27, 2006

உறவு!

நேற்று
புன்னகையில் அலர்ந்த
முகங்கள் - இன்று
வெறுப்பில் சுருங்குவதேன்!!

என்னை வரவேற்க
அவர் பாதையில்
தோரணங் கட்டியவர்கள்
வாசலின்
நிழலில் மறைந்துகொண்டு
தமை இல்லையென்று
ஜாடை காட்டுவதேன்!!

மறைந்து கொள்வதாய்
எனை
விழிமூடச் சொன்னவர்கள்
தொலைந்தே போனதேன்!!

அகம் வந்த உறவை
வாசல்வரை சென்று
வழியனுப்பினேன்
விட்டால் போதுமென்று
தலை தெறிக்க
ஓடுவதேன்!!

ஜீவனாய் சுரந்தனர்
என்னுள்ளே
என்றுமென் பயணம்
அவர் நினைவுடனே..
வெறும்
எச்சிலாய் சுரந்தேனோ
அவருள்ளே
உமிழ்ந்தபடி பயணம்
தத்தம்
திசையினிலே...

10 Comments:

Anonymous Anonymous said...

ரொம்ப நல்லாயிருக்கு

Sat Jan 28, 06:11:00 PM PST  
Blogger sathesh said...

மிக்க நன்றி கீதா

Sat Jan 28, 09:29:00 PM PST  
Blogger அனுசுயா said...

உறவுகள் பற்றிய இனிய ஒப்பீடு.. நன்று

Sun Jan 29, 12:26:00 AM PST  
Anonymous Anonymous said...

நன்றாக உள்ளது
நண்பரே
நிறையதடவை வாசித்தேன்
நன்றி

நேசமுடன்
-நித்தியா

Sun Jan 29, 02:48:00 AM PST  
Blogger sathesh said...

மிக்க நன்றி அனுசுயா

Sun Jan 29, 03:57:00 AM PST  
Blogger sathesh said...

தங்கள் வருகைக்கும் தங்கள் எண்ணத்தை பகிர்ந்துகொண்டமைக்கும் மிக்க நன்றி நித்தியா

Sun Jan 29, 04:26:00 AM PST  
Blogger பாலு மணிமாறன் said...

நிஜங்கள் எப்போதும் நிழலுடன்தான் நடக்கின்றன. அது தப்பான நினைப்புன்னு அப்பப்போ தோணும். ஆனால் ஒரு நல்ல வெயிலில் மறுபடியும் நிழல்கள் திரும்பவும் தெரிய ஆரம்பிச்சுடும்.

நல்ல சிந்தனை.நல்ல கவிதை

Sun Jan 29, 09:21:00 PM PST  
Blogger Unknown said...

அழுத்தமான கவிதை

Sun Jan 29, 09:23:00 PM PST  
Blogger sathesh said...

தங்கள் வருகைக்கும் தங்கள் எண்ணத்தை பகிர்ந்துகொண்டமைக்கும் மிக்க நன்றி பாலு

Mon Jan 30, 07:46:00 AM PST  
Blogger sathesh said...

நன்றி தேவ்

Mon Jan 30, 07:46:00 AM PST  

Post a Comment

<< Home