உறவு!
நேற்று
புன்னகையில் அலர்ந்த
முகங்கள் - இன்று
வெறுப்பில் சுருங்குவதேன்!!
என்னை வரவேற்க
அவர் பாதையில்
தோரணங் கட்டியவர்கள்
வாசலின்
நிழலில் மறைந்துகொண்டு
தமை இல்லையென்று
ஜாடை காட்டுவதேன்!!
மறைந்து கொள்வதாய்
எனை
விழிமூடச் சொன்னவர்கள்
தொலைந்தே போனதேன்!!
அகம் வந்த உறவை
வாசல்வரை சென்று
வழியனுப்பினேன்
விட்டால் போதுமென்று
தலை தெறிக்க
ஓடுவதேன்!!
ஜீவனாய் சுரந்தனர்
என்னுள்ளே
என்றுமென் பயணம்
அவர் நினைவுடனே..
வெறும்
எச்சிலாய் சுரந்தேனோ
அவருள்ளே
உமிழ்ந்தபடி பயணம்
தத்தம்
திசையினிலே...
புன்னகையில் அலர்ந்த
முகங்கள் - இன்று
வெறுப்பில் சுருங்குவதேன்!!
என்னை வரவேற்க
அவர் பாதையில்
தோரணங் கட்டியவர்கள்
வாசலின்
நிழலில் மறைந்துகொண்டு
தமை இல்லையென்று
ஜாடை காட்டுவதேன்!!
மறைந்து கொள்வதாய்
எனை
விழிமூடச் சொன்னவர்கள்
தொலைந்தே போனதேன்!!
அகம் வந்த உறவை
வாசல்வரை சென்று
வழியனுப்பினேன்
விட்டால் போதுமென்று
தலை தெறிக்க
ஓடுவதேன்!!
ஜீவனாய் சுரந்தனர்
என்னுள்ளே
என்றுமென் பயணம்
அவர் நினைவுடனே..
வெறும்
எச்சிலாய் சுரந்தேனோ
அவருள்ளே
உமிழ்ந்தபடி பயணம்
தத்தம்
திசையினிலே...
10 Comments:
ரொம்ப நல்லாயிருக்கு
மிக்க நன்றி கீதா
உறவுகள் பற்றிய இனிய ஒப்பீடு.. நன்று
நன்றாக உள்ளது
நண்பரே
நிறையதடவை வாசித்தேன்
நன்றி
நேசமுடன்
-நித்தியா
மிக்க நன்றி அனுசுயா
தங்கள் வருகைக்கும் தங்கள் எண்ணத்தை பகிர்ந்துகொண்டமைக்கும் மிக்க நன்றி நித்தியா
நிஜங்கள் எப்போதும் நிழலுடன்தான் நடக்கின்றன. அது தப்பான நினைப்புன்னு அப்பப்போ தோணும். ஆனால் ஒரு நல்ல வெயிலில் மறுபடியும் நிழல்கள் திரும்பவும் தெரிய ஆரம்பிச்சுடும்.
நல்ல சிந்தனை.நல்ல கவிதை
அழுத்தமான கவிதை
தங்கள் வருகைக்கும் தங்கள் எண்ணத்தை பகிர்ந்துகொண்டமைக்கும் மிக்க நன்றி பாலு
நன்றி தேவ்
Post a Comment
<< Home