Saturday, May 06, 2006

வாழ்க்கை!

இந்த பிறவி
வாழ்வதற்கே
நிச்சயம்
யாரும் வாழலாம்
எப்படியும்!
நீ
வாழ வேண்டுமென்றால்
வாழ்ந்தேயாக வேண்டுமென்றால்

ஏன் வாழவேண்டும்?
என்று
இதயத்தின் மூலையில்
சலிப்பின்
விரக்தியின்
அவநம்பிக்கையின்
முனகலாய்
ஒரு கேள்வி
கேட்டுவிட்டால் போதும்
மரணம்
பக்கம் வந்து
பல்லிளிக்கும் - பின்
வாழ்வின் பாதையில்
உன்
காலடி பதியும்
திசையெலாம் தோன்றி
தன்
பள்ளத்தாக்கின் அழகை
வர்ணிக்கும்

சிகரத்தின் விளிம்பினும்
பள்ளத்தின் ஆழம்
மனதை மயக்கும்
உன்னை இழுக்கும்

ஏறுவது கடினம்
விழுவது சுலபம்
வேறெதில் உன்
கவனம் இருக்கும்?

5 Comments:

Blogger Thekkikattan|தெகா said...

பாழ், நல்லா இருந்துச்சு...நன்றி

தெகா.

Sat May 06, 06:09:00 AM PDT  
Blogger sathesh said...

உண்மை,
வருகைக்கு மிக்க நன்றி!

Sun May 07, 04:42:00 AM PDT  
Blogger sathesh said...

தெகா,
வருகைக்கு மிக்க நன்றி!

Sun May 07, 04:43:00 AM PDT  
Anonymous Anonymous said...

Shouldn't it be "kadinam" (not "kadiNam")?
Also, "gavanam".

Sat May 13, 04:56:00 AM PDT  
Blogger sathesh said...

zero,
Thanks for corrections..i have corrected them...

Sat May 13, 08:07:00 AM PDT  

Post a Comment

<< Home